Breaking News

மதுரை | சம்பளம் வழங்க வலியுறுத்தி துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்ட காமராசர் பல்கலை. பேராசிரியர்கள்

மதுரை: சம்பளம் வழங்க வலியுறுத்தி துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள் போராட்டம் நடத்தினர்.

இப்பல்கலைக்கழகத்தில் 150-க்கும் மேற்பட்ட உதவி மற்றும் இணை பேராசிரியர்களும், 280-க்கும் மேற்பட்ட நிரந்தர அலுவலர்களும், 300 தற்காலிக பணியாளர்களும், 200க்கும் மேற்பட்ட தொலை நிலைக்கல்வி அலுவலர்கள், ஊழியர்களும், பணிபுரிகின்றனர். இவர்களுடன் சுமார் 400க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்களும் உள்ளனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளம், ஓய்வூதியம் வழங்க சுமார் ரூ.10.5 கோடி தேவை இருக்கிறது.

கடந்த சில மாதமாகவே பல்கலைக் கழகம் நிதி நெருக்கடியில் சிக்கியதால் ஒவ்வொரு மாதமும் பேராசிரியர்கள், ஓய்வூதியர்கள் உள்ளிட்டோருக்கு உரிய தேதியில் சம்பளம் வழங்க முடியாமல் நிர்வாகம் தவிக்கிறது. வருவாயை பெருக்க, துணைவேந்தர் ஜெ.குமார் சில நடவடிக்கையை எடுத்தாலும், அது கைகொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. செப்டம்பர் மாத்ததிற்கான சம்பளம் நேற்று வரை வழங்கவில்லை. இதனால் வங்கி கடனுக்கான தவனை, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யமுடியவில்லை என ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uNfUkAB
via

No comments