Breaking News

எம்ஏஎம்ஆர்.முத்தையாவை சுவீகாரம் எடுத்தது செல்லாது - இளையாத்தங்குடி கைலாசநாதர் சுவாமி கோயில் டிரஸ்ட் அறிவிப்பு

செட்டிநாடு குழும தலைவரான எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவை மறைந்த எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் சுவீகாரம் எடுத்தது செல்லாது என இளையாத்தங்குடி ஸ்ரீகைலாசநாத சுவாமி நித்யகல்யாணி அம்மன் தேவஸ்தானம் முறைப்படி மீண்டும் அறிவித்திருக்கிறது.

செட்டிநாடு குழுமத்தின் முன்னாள் தலைவரான எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் ஒக்கூரைச் சேர்ந்த ஐயப்பன் செட்டியார் என்பவரை சுவீகாரம் எடுத்திருந்தார். செட்டிநாட்டு நகரத்தார்கள் (செட்டியார்கள்) சுவீகாரம் எடுப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இதற்கென கண்டிப்பான சில விதிமுறைகளை அவர்கள் வைத்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது, சுவீகாரம் எடுப்பவரும் கொடுப்பவரும் ஒரேபிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XhaprnK
via

No comments