Breaking News

சேலத்தில் அனுமதியின்றி இயங்கி வந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்துக்கு சீல்

சேலம்: சேலத்தில் அனுமதியின்றி இயங்கி வந்த தனியார் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சேலம் ஐந்து ரோடு, பகுதியில் தனியார் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. இந்த மையத்தில் டிப்ளமோ, செவிலியர், ஆசிரியர் பயிற்சி அளிப்பதற்கு முறையான அனுமதி பெறாமல் இயங்குவதாகப் புகார் வந்தது. அதன்பேரில் காவல்துறை, தொழிலாளர் நலத்துறை, குழந்தைகள் நல குழு உறுப்பினர்கள், மருத்துவ அலுவலர்கள், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் பயிற்சி நிறுவன உரிமையாளர் விக்டோரியாவிடம் நேற்று வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/itQPsDR
via

No comments