Breaking News

கோவை கார் வெடிப்பு சம்பவம் | வழக்கு என்.ஐ.ஏ விசாரணைக்கு விரைவில் மாற்றம்?

கோவை: கோவை கோட்டைமேட்டில் கார் வெடித்த வழக்கு விரைவில் என்.ஐ.ஏ பிரிவுக்கு மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கோவை கோட்டைமேட்டில் கடந்த 23-ம் தேதி அதிகாலை 4.10 மணிக்கு கார் வெடித்து ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் கார் 2 துண்டாக உடைந்து, உருக்குலைந்து கிடந்ததையும், சத்தத்தையும் வைத்து போலீஸார் விசாரிக்கும் போது, காரில் வெடிமருந்துகள் கிலோ கணக்கில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Nvtz6hr
via

No comments