Breaking News

மதுரை | சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் வருங்கால தலைமுறை பாதிக்கப்படும் - சமூக நீதி கூட்டமைப்பு கருத்து

மதுரை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால், வருங்கால தலைமுறையினர் பாதிக்கப்படுவர் என, சமூக நீதி கூட்டமைப்பு நிர்வாகிகள் நாகரத்தினம், விஜயகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு வீர வைச பேரவைத் தலைவர் எஸ்.நாகரத்தினம், அனைத்து மறவர் கூட்டமைப்பு தலைவர் விஜயகுமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் பிசி, எம்பிசி, சீர்மரபினர் அடங்கிய 245 சாதிகளுக்கான அரசு வேலை வாய்ப்பு, கல்விக்கான இட ஒதுக்கீடு பாரபட்சத்தை மீட்டெடுக்க, பல்வேறு போராட்டம் நடத்தினோம். இதுவரை அரசு செவி சாய்க்கவில்லை. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன்மூலம் சரியான வகையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என, தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tVmwANj
via

No comments