Breaking News

ஐயப்ப பக்தர்கள் வருகையால் குமுளியில் களைகட்டிய வர்த்தகம் - 24 மணிநேரமும் செயல்படும் சிப்ஸ் கடைகள்

கூடலூர்: சபரிமலை ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் குமுளியில் நேந்திரம் வாழைப்பழ சிப்ஸ் விற்பனை களைகட்டியுள்ளது. 24 மணிநேரமும் கடைகளில் வர்த்தகம் நடைபெற்று வருகின்றன.

தேனி மாவட்ட தமிழக கேரள எல்லை பெரியாறு புலிகள் சரணாலயத்தில் குமுளி அமைந்துள்ளது. இப்பகுதியில் தேக்கடி படகு போக்குவரத்து, யானை சவாரி, பசுமை நடை என்று சுற்றுலா பயணிகளை கவரும் ஏராளமான அம்சங்கள் உள்ளன. மேலும் ஆண்டு முழுவதும் நிலவும் குளிர் பருவநிலை காரணமாக உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இவர்களை கவர்வதற்காக தற்காப்புக்கலையான களரி, பாரம்பரிய கலையான கதகளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CFS9avi
via

No comments