Breaking News

மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் கடந்த 2019 டிச.1-ம் தேதி போட வேண்டிய ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம், 56 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வரும் 10-ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தன.

இதைத் தொடர்ந்து கடந்த 3-ம் தேதி தொழிலாளர் ஆணையரகத்தில் தொழிலாளர் நலதுணை ஆணையர் ரமேஷ் குமார் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் முடிவு எட்டப்படவில்லை. அதனைத் தொடர்ந்து, அவர் தலைமையில் மீண்டும் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில் அரசு தரப்பில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை மேற்கொள்ளலாம் என தொழிலாளர் நலதுணை ஆணையரிடம் மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UoyLW8V
via

No comments