Breaking News

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்: 26 காளைகளை அடக்கிய வீரருக்கு கார்

மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டி தொடங்கியதும் வாடிவாசலில் சீறிப் பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர். இதில் அதிகபட்சமாக 26 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபி சித்தருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார், நாட்டு இனப் பசு பரிசாக வழங்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் தை முதல் நாளில் அவனியாபுரத்திலும், 2-ம் நாளில் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. 3-ம் நாளான நேற்று உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Pb1aJXA
via

No comments