Breaking News

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு இன்று விடுமுறை

சென்னை: காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு இன்று (ஜன.17) விடுமுறை விடப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் 1200-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு சுமார் 3 ஆயிரம் டன் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன.

கடைகளில் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த சந்தைக்கு திருவள்ளூர்,காஞ்சி, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தின் சில பகுதிகளில் இருந்து காய்கறிகள் வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GPR7Zeo
via

No comments