Breaking News

கால்பந்து அரசன் பீலேவின் உடல் அடக்கம்: ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அஞ்சலி

சாவோ பாவ்லோ: கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.

3 முறை உலகக் கோப்பை கால்பந்து சாம்பியனான பிரேசிலின் ஜாம்பவான் பீலே (82), கடந்த டிசம்பர் 29-ம் தேதி மரணம் அடைந்தார். செரிமான மண்டலப் பகுதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பீலே, சாவோ பாவ்லோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி காலமானார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DPepRxO

No comments