Breaking News

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்.27-ம் தேதி நடக்க உள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிப்.3-ம் தேதி மனு தாக்கல் செய்கிறார். தேமுதிக, அமமுக வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சியும் வேட்பாளரை அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி காலமானதை அடுத்து, அந்த தொகுதிக்கு பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (31-ம் தேதி) தொடங்கி, பிப்.7-ம் தேதி வரை நடைபெறுகிறது. 8-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். மனுக்களை திரும்ப பெற பிப்.10-ம் தேதி கடைசி நாள் ஆகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nhxJX6k
via

No comments