Breaking News

ஆதிதிராவிடர் துணைத்திட்ட நிதியில் ரூ.5,318 கோடி பயன்படுத்தப்படவில்லை: ஆர்டிஐ-யில் அதிர்ச்சி தகவல்

மதுரை: ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்கு (SCSP) கடந்த 6 ஆண்டுகளாக ஒதுக்கிய நிதியில் ரூ.5,318 கோடி நிதி பயன்படுத்தவில்லை என்பதாக ஆர்டிஐ அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆதிதிராவிடர் மக்களை சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வி நிலைகளில் இதர பிரிவினருக்கு இணையாக உயர்த்திட வழிவகுக்கும் ஆதிதிராவிடர் துணைத் திட்டம் தமிழ்நாட்டில் கடந்த 1980-1981-ஆம் நிதியாண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி கடந்த 2016-17 முதல் 2021-22 நிதியாண்டுகள் வரையிலான 6 நிதியாண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி, அதிலிருந்து திட்டங்களுக்கு செலவிடப்பட்ட தொகை மற்றும் பயன்படுத்தாமல் மீதம் இருக்கும் நிதியின் விபரங்களை மதுரை கே.கே.நகரை சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் பெற்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ly6VxFo
via

No comments