Breaking News

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பூத் சிலிப் நாளை முதல் விநியோகம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி இரண்டாவது நாளாக நேற்று நடந்தது. நாளை (19-ம் தேதி) முதல் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று தேர்தல் அலுவலர்கள் நேரடியாக ‘பூத் சிலிப்’ வழங்க உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, 238 வாக்குச்சாவடிகளும், கூடுதலாக (ரிசர்வ்) 48 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் பணிபுரிய மொத்தம் 1,206 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rE3yx0w
via

No comments