Breaking News

சென்னையில் நில அதிர்வு உணரப்பட்டதாக பீதி - கட்டிடத்தை விட்டு வெளியேறிய ஊழியர்கள்

சென்னை: சென்னை அண்ணா சாலையில் நேற்று நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் பரவிய நிலையில், கட்டிடங்களை விட்டு ஊழியர்கள் அவசரமாக வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

துருக்கி, சிரியாவில் கடந்த 6-ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி சுமார் 48 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இந்தியாவிலும் ஜம்மு காஷ்மீர், பிஹார், அசாம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் எச்சரித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bi1M64R
via

No comments