Breaking News

இடைத்தேர்தல் நடக்கும் ஈரோடு கிழக்கில் பலத்த பாதுகாப்பு - துணை ராணுவத்தினர் அணிவகுப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கட்சியினர் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வந்த 2 கம்பெனி துணை ராணுவத்தினர் தொகுதியில் அணிவகுப்பு நடத்தினர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வேட்பாளர் பட்டியல்படி, காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக உட்பட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தொகுதியில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்கள் பெயர் இடம் பெற முடியும். தற்போது 77 வேட்பாளர்கள் உள்ளதால் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EmylvQY
via

No comments