Breaking News

பத்திரிகை புகைப்படக் கலைஞர்களின் சார்பில் சென்னையில் ஒரு வார புகைப்பட கண்காட்சி - முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் ஒரு வாரம் நடக்க உள்ள புகைப்படக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தில், பல்வேறு பத்திரிகைகளின் புகைப்படக் கலைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இயற்கை சீற்றங்கள், முக்கிய சம்பவங்கள் போன்ற நிகழ்வுகளில் தாங்கள் துணிச்சலுடன், சிரமப்பட்டு எடுத்தசிறந்த புகைப்படங்களை அனைவரும் ரசிக்கும் வகையில் இவர்கள் காட்சிப்படுத்துகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nsOWKhI
via

No comments