Breaking News

கோவை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இடைத்தரகர்கள் இருந்தால் நடவடிக்கை: ஆர்டிஓ எச்சரிக்கை

கோவை: கோவையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இடைத்தரகர்கள், வெளிநபர்கள் இருப்பதாக தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு (ஆர்டிஓ) கோவை சரக இணைப் போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை சரக இணை போக்குவரத்து ஆணையரின் கட்டுபாட்டில் கோவை வடக்கு, தெற்கு, மையம், மேற்கு, பொள்ளாச்சி, மேட்டுபாளையம், திருப்பூர், தாராபுரம் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் உள்ளதாகவும், அவர்களின்றி எந்தவித பணிகளும் அங்கு நடப்பதில்லை எனவும் கோவை நுகர்வோர் மையம் சார்பில் கோவை சரக இணைப் போக்குவரத்து ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mnqAT6r
via

No comments