Breaking News

IND vs AUS 4-வது டெஸ்ட் | 3 வருடங்களுக்குப் பிறகு சதம் விளாசி விராட் கோலி தகர்த்த சாதனைகள்

அகமதாபாத்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 571 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. விராட் கோலி 186 ரன்களையும், அக்சர் படேல் 79 ரன்களையும் விளாசினர்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத் தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 99 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில் 128, ரோஹித் சர்மா 35, சேதேஷ்வர் புஜாரா 42 ரன்களில் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 59, ரவீந்திர ஜடேஜா 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/icahAsn

No comments