Breaking News

கரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி - உயர் நீதிமன்றத்தில் ஏப்.10 முதல் நேரடி, ஆன்லைன் கலப்பு விசாரணை

சென்னை: கரோனா பரவல் அதிகரித்து வருவதால் வரும் ஏப்.10-ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையி்ல் நேரடி மற்றும் ஆன்லைன் மூலமாக கலப்பு முறையில் விசாரணை நடத்தப்படும் என உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

மறுஉத்தரவு வரை அமல்: இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் (பொறுப்பு) எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா பரவல் அதிகரித்து வருவதால் வரும் ஏப்.10 -ம் தேதி முதல் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேரடி மற்றும் ஆன்லைன் காணொலி காட்சி என இரண்டு முறையிலும் கலப்பு விசாரணை நடைபெறும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/q1MyAib
via

No comments