Breaking News

சென்னையில் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சோகம் - குளத்தில் மூழ்கி 5 இளம் அர்ச்சகர்கள் உயிரிழப்பு

சென்னை: சென்னை நங்கநல்லூர் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது, 5 இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து,உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை நங்கநல்லூர் எம்எம்டிசி காலனியில் சர்வ மங்கள தேவி சமேத தர்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, மூவரசம்பட்டு குளத்தில் இந்த கோயிலின் தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். தீர்த்தவாரிக்கான சடங்குகள் முடிந்த பிறகு, சுவாமி சிலையுடன் 20-க்கும் மேற்பட்ட கோயில் அர்ச்சகர்கள் குளத்தில் இறங்கினர். சுவாமி சிலையை குளத்தில் இறக்கி நீராட்டியபோது, ராகவன் என்றஇளம் அர்ச்சகர் தண்ணீரில் மூழ்கிஎழுந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கினார். அருகே இருந்த மற்ற அர்ச்சகர்கள் உடனடியாக நெருங்கிச் சென்று, அவரை காப்பாற்ற முயன்றனர். துரதிர்ஷ்டவசமாக, அவர்களும் அடுத்தடுத்து நீரில் மூழ்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ylgvNTe
via

No comments