Breaking News

தமிழகம், புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது: 9.76 லட்சம் பேர் எழுதுகின்றனர்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் 4,216 மையங்களில் 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழக பள்ளிக்கல்வியில் இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று (ஏப்.6) தொடங்கி ஏப்.20 வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மொழிப் பாடத் தேர்வுகள் நடைபெறுகின்றன. இத்தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 4,216 மையங்களில் 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதில் 37,798 தனித்தேர்வர்கள், 13,151 மாற்றுத் திறனாளிகள், 5 மூன்றாம் பாலினத்தவர், 2,640 சிறை கைதிகளும் அடங்குவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/K5yjvuA
via

No comments