Breaking News

ஆளுநர் மாளிகைக்கு வழங்கப்பட்ட நிதியில் விதிமீறல் - பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

சென்னை: ஆளுநர் மாளிகைக்கு வழங்கப்பட்ட நிதியில் விதிமீறல்கள் உள்ளன. இனி, விதிகள்படியே நிதி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

ஆளுநர் தொடர்பாக பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தின் மீதுபேசிய காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, ‘‘ஆளுநருக்கான விருப்புரிமை நிதியைக் கடந்த ஆட்சியாளர்கள் ரூ.5 கோடியாக உயர்த்தியுள்ளனர். அதில் ‘பெட்டி கிரான்ட்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெட்டி கிரான்ட் என்பது ரூ.5 கோடியா? ஆளுநர் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வதாகக் கூறுகிறார்கள். நிதியை அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதை நிதியமைச்சர் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cPDzHiW
via

No comments