Breaking News

பஞ்சாப் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்களின் உடல்களுக்கு கண்ணீர் அஞ்சலி

மேட்டூர்/போடி: பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் உயிரிழந்த தமிழக வீரர்களின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, அரசு மரியாதை வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் கடந்த 12-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில், சேலம் மாவட்டம் மேட்டூர் வனவாசி அருகே உள்ள பனங்காட்டை சேர்ந்த கமலேஷ், தேனி மாவட்டத்தை சேர்ந்த யோகேஷ்குமார் உள்பட 4 வீரர்கள் உயிரிழந்தனர். கமலேஷின் உடல் விமானம் மூலமாக கோயம்புத்தூருக்கு நேற்று கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸில் சொந்த ஊரான வனவாசிக்கு மதியம் ஒரு மணிக்கு உடல் கொண்டு வரப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nMzwT7c
via

No comments