சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்யாததால் வெளிநடப்பு - பழனிசாமி விளக்கம்
சென்னை: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்யாததால் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு, புறக்கணிப்பு செய்கிறோம் என்று எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதிமுக உறுப்பினர் சி.விஜயபாஸ்கர், ‘‘தமிழகத்தில் ஒற்றை கையெழுத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலமாகஇன்றைக்கு அரசு பள்ளிகளில் படித்த 465 மாணவ, மாணவிகளை மருத்துவக் கல்லூரியிலும், 119 மாணவ, மாணவிகளை பல் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை உருவாக்கியவர் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி’’ என்றுகூறி விவாதத்தை தொடங்கி வைத் தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/btsXYzM
via
No comments