Breaking News

முதல்தர கிரிக்கெட்டில் பங்கேற்ற அனுபவம் இல்லாமலேயே ஐபிஎல் தொடரில் பிரகாசித்துள்ள சுயாஷ் சர்மா

புதுடெல்லி: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 205 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணியானது 17.4 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கொல்கத்தா அணியின் வெற்றியில் 19 வயதான அறிமுக சுழற்பந்து வீச்சாளரான சுயாஷ் சர்மாவும் சிறந்த பங்களிப்பை வழங்கினார்.

வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக இம்பேக்ட் பிளேயர் விதியின் கீழ் களம் இறங்கிய சுயாஷ் சர்மா தனது லெக் ஸ்பின்னால் தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், கரண் சர்மா ஆகியோரது விக்கெட்களை கைப்பற்றினார். முஷ்டாக் அலி அல்லது விஜய் ஹசாரே உள்ளிட்ட முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சுயாஷ் விளையாடியது இல்லை. டெல்லி யு-25 அணியில் விளையாடி வருகிறார். முதல்தர போட்டிகளின் அனுபவம் இல்லாமல் போட்டியை காண வந்த சுமார் 70 ஆயிரம் ரசிகர்களின் முன்னிலையில் எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுயாஷ் சிறப்பான திறனை வெளிப்படுத்தியது அனைவரது மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Mbs0Jku

No comments