Breaking News

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு: சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருப்பு உடையணிந்தும், கைககளில் கருப்புக்கொடி ஏந்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல்காந்தியின் தகுதி இழப்பு நடவடிக்கையைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக சனிக்கிழமை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், வள்ளுவர் கோட்டத்தில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bIL2tTG
via

No comments