Breaking News

ரூ.1,260 கோடியில் சென்னை விமான முனையம் - பிரதமர் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையம் மற்றும் ரூ.4,000 கோடியில் சாலைகள் உள்ளிட்ட புதிய திட்டங்களை பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்து, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில், 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள, புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்தார். உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முனையம் மூலம், சென்னை விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறன் 2.3 கோடியில் இருந்து, 3 கோடியாக உயர்ந்துள்ளது. விமான நிலையத்தில் உள்ள வசதிகளை, அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் விமான நிலைய அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கினர். இந்த நிகழ்வில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eVCuKYw
via

No comments