Breaking News

IPL 2023 | 4 வருடத்துக்குப் பிறகு சேப்பாக்கத்தில் களமிறங்கும் சிஎஸ்கே: வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் தோனி குழுவினர்

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் (சிஎஸ்கே), கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 92 ரன்கள் விளாசிய நிலையில் மற்ற பேட்ஸ்மேன்களிடம் இருந்து பெரிய அளவிலான மட்டைவீச்சு வெளிப்படவில்லை. மேலும் பந்து வீச்சிலும் சிஎஸ்கே வீரர்கள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இம்பேக்ட் பிளேயர் விதியில் களமிறக்கப்பட்ட துஷார் தேஷ்பாண்டே 3.2 ஓவர்களை வீசி 51 ரன்களை தாரைவார்த்திருந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தீபக் ஷாகரும் கூட இறுதிக்கட்டத்தில் சிறப்பாக செயல்படத் தவறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://www.hindutamil.in/news/sports/970297-csk-to-play-in-chepauk-after-4-years-dhoni-team-looking-to-start-with-win.html?frm=rss_more_article

No comments