Breaking News

ஆதிதிராவிடர், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியில் `நமக்கு நாமே' திட்டத்தில் மக்கள் பங்களிப்பு 20% ஆக குறைப்பு

சென்னை: நமக்கு நாமே திட்டத்தின் கீழ், நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக பட்டியலின, பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில், பொதுமக்களின் பங்களிப்புத் தொகையை 20 சதவீதமாக குறைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமுதாய உட்கட்டமைப்புகளை உருவாக்குவதிலும், பராமரிப்பதிலும் பொதுமக்களின் சுயஉதவி நடைமுறையை மேம்படுத்தவும் மற்றும் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கிலும் 2021-ல் நமக்கு நாமே திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WUTIwsl
via

No comments