Breaking News

பொன்னமராவதி அருகே கண்மாயில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உயிரிழப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்மாயில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் நேற்று (மே 17) உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் வைரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சுதா. இவர்களது மகன்கள் லோகநாதன்(12), தருண்ஸ்ரீ(8). திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்த இவர்கள் இருவரும் கோடை விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் ஒலியமங்கலம் ஊராட்சி சேர்வைகாரன்பட்டி கிராமத்தில் உள்ள எத்தன் கண்மாயில் குளிக்க சென்றபோது எதிர்பாராமல் தண்ணீரில் மூழ்கி லோகநாதன், தருண்ஸ்ரீ ஆகியோர் உயிரிழந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wfs0xL2
via

No comments