Breaking News

உலகத்தரத்தில் திருநெல்வேலியில் ரூ.33 கோடியில் பொருநை அருங்காட்சியகம் - முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலியில் உலகத்தரத்தில் ரூ.33.02 கோடியில் அமைக்கப்படும் பொருநை அருங்காட்சியகத்துக்கான கட்டுமானப் பணிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தின் நாகரிகத் தொட்டிலாக கருதப்படும் ஆதிச்சநல்லூர், சங்ககாலப் பாண்டியரின் துறைமுகமான கொற்கை, இரும்புக் காலத்தைச் சார்ந்த சிவகளை ஆகிய இடங்களில் கிடைத்த தொல்பொருட்களை ஒரே இடத்தில் ‘பொருநை நாகரிகம்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் திருநெல்வேலியில் நவீன வசதிகளோடு பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2021 செப். 9-ம் தேதி சட்டப்பேரவையில் 110- விதியின் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WQhV9Bz
via

No comments