Breaking News

மதுரை சித்திரைத் திருவிழா பாதுகாப்பு பணியை ஊக்கப்படுத்திய காவல் ஆணையர் - அசைவ விருந்து அளித்து அசத்தல்

மதுரை: மதுரையில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் மிக பிரசித்தி பெற்றது சித்திரைத் திருவிழா. இத்திருவிழாவையொட்டி, பல லட்சம் மக்கள் திரளுவது வழக்கம். இதற்கான பாதுகாப்பு என்பது காவல் துறைக்கு சவாலானது.

அவ்வகையில், இவ்வாண்டுக்கான சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் சுமார் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்மூலம் பாதுகாப்பு குளறுபடி எதுவுமின்றி அமைதியான முறையில் முடிந்தது.

இந்நிலையில், இத்திருவிழா பாதுகாப்பு பணியை இரவு, பகல் பாராமல் திறம்பட மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை பாராட்டுவிதமாக ‘படாக் கான்‘ என்ற நிகழ்ச்சி ஆயுதப் படை மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவில் பாதுகாப்பு பணியை சிறப்பு செய்தமைக்கு துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோரை பாராட்டி நினைவு பரிசுகளை காவல் ஆணையர் நரேந்திரன் வழங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vTrdowO
via

No comments