Breaking News

நில வழிகாட்டி மதிப்பை அதிகரித்து மோசடி - அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடர அரசுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: சுங்கச்சாவடி அமைக்க கையகப்படுத்திய நிலத்தின் வழிகாட்டி மதிப்பீட்டை 10 மடங்கு அதிகரித்து காட்டிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை தொடர தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் சுங்கச்சாவடி அமைக்க, கடந்த 2018-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 6 ஆண்டுகள் கடந்தும் அந்த நிலத்தை ஆணையம் இன்னும் பயன்படுத்தவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4y3rAxQ
via

No comments