Breaking News

முதல்வர், தலைவர்கள் அன்னையர் தின வாழ்த்து - எந்த சூழலிலும் பெற்றோரை கைவிட கூடாது என ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

சென்னை: அன்னையர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், தங்கள் பிள்ளைகளை சாதனையாளராக உருவாக்கிய 10 தாய்மார்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விருது வழங்கி கவுரவித்தார்.

தாய்மார்களை போற்றும் அன்னையர் தினம் நேற்று (மே 14) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இதில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 10 சாதனையாளர்களின் தாய்மார்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் விருது வழங்கி கவுரவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vGVXqDZ
via

No comments