Breaking News

பொதுவான பணி நிலை வரம்பில் ரேஷன் பணியாளர்கள்: சாதக - பாதகங்களை ஆராய குழு அமைப்பு

திருச்சி: கூட்டுறவுத் துறையின்கீழ் பணியாற்றும் ரேஷன் கடை பணியாளர்களை பொதுவான பணி நிலை வரம்புக்குள் கொண்டு வருவதால் ஏற்படும் சாதக- பாதகங்கள் குறித்து பரிசீலித்து அறிக்கை அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள், பணிப் பரவல் முறையிலும் மற்றும் அயல் பணி முறையிலும் இருப்பிடங்களிலிருந்து 40 கி.மீ முதல் 90 கி.மீ தொலைவு வரை உள்ள சங்கங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பணியிடம் தொலைவில் அமைந்துள்ளது, பணிச்சுமை மற்றும் அலைச்சல் காரணமாக மிகுந்த சிரமம் ஏற்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்து வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/618S2G5
via

No comments