Breaking News

நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் ஒன்றியத் தலைவரும் கவுன்சிலருமான பெண் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத் தலைவராக பொறுப்பு வகித்தவர் பஞ்சவர்ணம். அண்மையில் இவரை ஒன்றியக்குழு தலைவர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக மற்ற அனைத்து கவுன்சிலர்களும் தீர்மானம் நிறைவேற்றினர். அதையடுத்து, பஞ்சவர்ணத்தின் ஒன்றியத் தலைவர் பொறுப்பு பறிக்கப்பட்டது. ஆனால், நரிக்குடி ஒன்றியத்தில் நடைபெறும் எந்த ஒரு திட்டப் பணிகள் குறித்தும் கவுன்சிலர் என்ற முறையில் பஞ்சவர்ணத்திற்கு தெரியப்படுத்தப்படுவது இல்லையாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Oqtzj0T
via

No comments