Breaking News

ஒட்டன்சத்திரம், பழநி பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பழநி பகுதியில் நேற்று முன்தினம் (மே 11) இரவு சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழைக்கு மக்காச் சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாய்ந்து விட்டால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஒட்டன்சத்திரம், பழநி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு (மே 11) 8.30 மணிக்கு பழநி, கோம்பைபட்டி, கணக்கன்பட்டி, ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் மழைநீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LdT1UNm
via

No comments