Breaking News

TNPL | வறறப பதகக தரமபயத சகம மதர பநதரஸ

சென்னை: டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பியது சீகம் மதுரை பேந்தர்ஸ் அணி.

சேலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சீகம் மதுரை பேந்தர்ஸ் டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை பவர்பிளேவில் 23 ரன்களுக்கு 4 விக்கெட்கள் என கட்டுப்படுத்தினர் மதுரை சீகம் பேந்தர்ஸ் பந்து வீச்சாளர்கள். இதன் மூலம் இந்த சீசனில் பவர்பிளேவில் குறைந்த ரன்களை பதிவு செய்தது சேலம் ஸ்பார்ட்டன்ஸ். அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் அபிஷேக் தன்வார் 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். அவருக்கு அடுத்தபடியாக அமித் சாட்விக், கவுரி சங்கர் ஆகியோர் தலா 17 ரன்களும், ஷன்னி சாந்து 16 ரன்களும் சேர்த்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0KE3ATJ

No comments