ஓய்வு முடிவில் மாற்றம்: ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பினார் பென் ஸ்டோக்ஸ்

லண்டன்: ஓய்வு முடிவை திரும்ப பெற்றுக்கொண்டு உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு மீண்டும் திரும்பி உள்ளார் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ். டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக விளையாடுவது சாத்தியம் இல்லாதது எனக்கூறி குறுகிய வடிவிலான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதேவேளையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியை அபாரமாக வழிநடத்தி வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/F03MWj8
No comments