Breaking News

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் அகில் ஷியோரன்

பாகு: ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சூடுதலில் இந்தியாவின் அகில் ஷியோரன் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் அவர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

அஜர்பைஜானின் பாகு நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சூடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ரைபிள் 3-பொஷிசன் பிரிவில் இந்தியாவின் அகில் ஷியோரன் 450 புள்ளிகள் குவித்து வெண்கலப் பதக்கம் வென்றார். ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் ஷ்மிர்ல் 462.6 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், செக்குடியரசின் பீட்டர் நிம்பர்ஸ்கி 459.2 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gnH9hq0

No comments