Breaking News

அருணாச்சல பிரதேச வீரர்களுக்கு விசா மறுப்பு - சீனா சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார் அனுராக் தாக்குர்

புதுடெல்லி: சீனாவின் ஹாங்சோ நகரில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் இந்திய அணியில் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த வூஷூ (தற்காப்புக் கலை விளையாட்டு) வீரர்களான நைமன் வாங்சு, ஒனிலு தேகா, மேபங் லாம்கு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஆனால் இவர்கள் 3 பேருக்கும் விசா வழங்க சீனா மறுத்துள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சீன அதிகாரிகள், இந்திய வீரர்கள் சிலருக்கு எதிராகப் பாரபட்சம் காட்டியுள்ளனர் என்பதை இந்திய அரசு அறிந்துள்ளது. குடியிருப்பு மற்றும் இனத்தின் அடிப்படையில் தனது குடிமக்களை வேறுபடுத்தி நடத்தப்படுவதற்கு எதிராக இந்தியா உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vQCKkhs

No comments