Breaking News

பாகிஸ்தான் பந்து வீச்சில் தடுமாற்றம் ஏன்? - மனம் திறக்கும் ஷுப்மன் கில்

கொழும்பு: பாகிஸ்தான் அணிக்கு எதிராக அடிக்கடி விளையாடாததால் அவர்களுடைய பந்துவீச்சு தாக்குதல்கள் முக்கிய போட்டிகளில் வித்தியாசத்தை ஏற்படுத்துவதாக இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் 32 பந்துகளை சந்தித்த நிலையில் வெறும் 10 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அந்த ஆட்டத்தில் இந்திய அணியின் டாப் ஆர்டர் 66 ரன்களுக்கு ஆட்டம் கண்டிருந்தது. இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுடன் இந்திய அணி இன்று மீண்டும் மோதுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JsdWLGz

No comments