Breaking News

ODI WC 2023 | “தோல்வி விளையாட்டின் ஒரு பகுதி” - வங்கதேச ரசிகை

சென்னை: நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி தோல்வியை தழுவியது. இந்தப் போட்டி சென்னை - சேப்பாக்கத்தில் நடைபெற்றது. போட்டியை காண வங்கதேசத்தை சேர்ந்த ரசிகர்கள் சென்னை வந்திருந்தனர்.

8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் வங்கதேசம் தோல்வியை தழுவியது. இதுவரை நடப்பு உலகக் கோப்பையில் மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளது வங்கதேசம். இதில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை தழுவி உள்ளது. அடுத்ததாக இந்தியாவுடன் வரும் 19-ம் தேதி வங்கதேசம் விளையாட உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/L9DGnYP

No comments