நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் | ஷான்டோ அபார சதம்: 2-வது இன்னிங்ஸில் வங்கதேசம் 212 ரன்கள் குவிப்பு

சில்ஹெட்: நியூஸிலாந்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் வங்கதேசம் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்துள்ளது. அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ அபாரமாக ஆடி சதமடித்துள்ளார். சில்ஹெட் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ்வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 310 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் 3-ம்நாள் ஆட்டத்தை நேற்று கைல்ஜேமிசன் 7, டிம் சவுத்தி ஒரு ரன்னுடன் ஆட்டத்தைத் தொடங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JK2uS7m

No comments