Breaking News

AUS vs PAK 3-வது டெஸ்ட் | பாகிஸ்தான் அணி 313 ரன்கள் குவிப்பு

சிட்னி: சிட்னி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 313 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிட்னியில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான அப்துல்லா ஷபிக், சைம் அயூப் டக் அவுட்டில் வெளியேறினர். சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடிய பாபர் அஸம் 26, சவுத் ஷகீல் 5, ஷான் மசூத் 35 ரன்களில் ஆட்டமிழந்தனர். 96 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் முகமது ரிஸ்வான், ஆகா சல்மான் ஜோடி அதிரடியாக விளையாடியது. ரிஸ்வான் 103 பந்துகளில், 88 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் சஜித் கான் 15, ஹசன் அலி 0 ரன்களில் வெளியேறினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jB98kXw

No comments