Breaking News

கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - ஆஸி. மகளிர் அணி இன்று மோதல்

மும்பை: இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்குமும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இந்தியஅணி வென்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட்போட்டித் தொடரில் மோதி வருகின்றன. இதில் முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது. இந்நிலையில் கடைசி ஆட்டத்தில் இரு அணிகளும் இன்று மோதுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Zo6FNWP

No comments