Breaking News

``விக்ரமாதித்தனாக சாகசம் செய்வார் எடப்பாடி பழனிசாமி..!" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, குடும்பத்தினருடன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

செல்லூர் ராஜூ

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், "இந்த புத்தாண்டில் மதுரை மக்கள் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்க வேண்டும். 2023-ல் விரும்பத்தகாத நிகழ்வுகள், புதிய வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது.

புதிய ஆண்டில் அப்படி இல்லாமல் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக மலர வேண்டும் என்பதற்காக நானும், குடும்பத்தாரும் மீனாட்சி சொக்கநாதரை தரிசனம் செய்தோம்.

செல்லூர் ராஜூ

ரொம்ப மகிழ்ச்சியான ஆண்டாக இந்தாண்டு தொடங்கி இருக்கிறது. அ.தி.மு.க-விற்கு பிரகாசமான எதிர்காலத்தை மீண்டும் உருவாக்கிற வகையில், விக்ரமாதித்தன் கதைபோல் மீண்டும் சாகசங்களை கழக பொதுச் செயலாளர் தொடர்ந்து நிகழ்த்துவார்.

மிகப்பெரிய மகிழ்ச்சியை அ.தி.மு.க-விற்கு மக்கள் கொடுக்க இருக்கிறார்கள். எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். மக்கள் எல்லாரும் ஒரு முகமாக அ.தி.மு.க ஆட்சிதான் அமைய வேண்டும் என்று  விரும்புகிறார்கள்.

புயல் மழை வறட்சி என எல்லா காலங்களிலும் அ.தி.மு.க அரசு நிர்வாகத்தை முடுக்கிவிட்டு மக்கள் பணி செய்தது.

செல்லூர் ராஜு

மக்களுக்கு ஏற்பட்டிருந்த இழப்புகளுக்கு ஈடு செய்கிற அளவுக்கு கொடுக்க முடியாவிட்டாலும், கழகம் சார்பிலும் தொண்டு நிறுவனங்கள் சார்பாகவும் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்ற வகையில் செய்துள்ளோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/9CsJqYL

No comments