Breaking News

கரோனா தொற்று பரவல் அதிகரிப்பு எதிரொலி; மதுரையில் ஒரே நாளில் 18 தெருக்களுக்கு சீல்: முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம்

மதுரையில் கரோனா தொற்று அதிகமாக உள்ள 18 தெருக்களை மாநகராட்சி நிர்வாகம் ஒரே நாளில் சீல் வைத்தது. வாகனங்களும், மக்களும் செல்லாதவாறு அந்த தெருக்களை தகரங்களை வைத்து மாநகராட்சி ஊழியர்கள் அடைத் தனர்.

மதுரையில் கரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகிறது. இதையடுத்து மதுரையில் கரோனா தொற்று அதிகமாக உள்ள தெருக்களைக் கணக்கெடுத்து அந்தத் தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. மது ரையில் நேற்று ஒரே நாளில் 18 தெருக்களுக்கு மாநகராட்சி நிர் வாகம் சீல் வைத்தது. அந்த தெருவுக்குள் யாரும் நுழைய முடியாதவாறு தகரங்களை வைத்து அடைத்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dNymSP
via

No comments