Breaking News

திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவல்: பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்க சுகாதார துறையினர் ஏற்பாடு

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் நோய் தடுப்புப்பணி கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்க சுகாதாரத்துறையினர் நடவ டிக்கை எடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு தினசரி 4 ஆயிரத்தை எட்டியுள்ளது. சென்னை பெரு நகரத்தில் மட்டும் நேற்று முன்தினம் 1,460 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை, சேலம், மதுரை, நாகப்பட்டினம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு தினசரி அதிகரித்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Oygz9z
via

No comments