பல்லடம் அருகே 2 கார்கள் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு: மது போதையில் மணல் லாரியை இயக்கிய ஓட்டுநர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கார்கள் மீது எதிரே வந்த லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவர், மனைவி, மகள் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த வல்லகுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்(37). மென்பொருள் பொறியாளர். இவரது மனைவி சரண்யா(30), மகள் தனிகா(7). இவர்கள் மூவரும் தங்களது காரில் நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் நோக்கிச் சென்றனர். காரை கார்த்திக் ஓட்டிச் சென்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3g2aUUt
via
No comments